பொறியியல் படிக்க விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி இதோ ! அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி...

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்கள் தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய  மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.


 


                பொறியியல் கல்லூரிகளில்  பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்பட்டு  வருகின்றன.இதன் காரணமாக பள்ளிகளில் அவரவர்களின் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இதுவரை இருந்து வந்தது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள்  பொறியியல் படிப்பில் சேர அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர் . இந்நிலையில்  அகில இந்திய தொழில்நுட்ப  கவுன்சிலான  AICTE தமிழ்,இந்தி,தெலுங்கு,குஜாராத்தி,மராத்தி,கன்னடம்.உள்ளிட்ட 7மொழிகளில் வரும் கல்வியாண்டு முதல்  பொறியியல் பயிலலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது . இதன்காரணமாக ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் தாய் மொழியிலும் இடம்பெறும் என AICTE கூறியுள்ளது.

பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய  மொழிகளில்  மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

பொறியியல் பாடங்களை மொழிப்பெயர்ப்பு செய்ய சிறப்பு மென்பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன .

இதனால் இனி தாய்மொழி  வழிக்கல்வி பயின்ற மாணவர்களின் பொறியியல் கனவு நனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்வி பயில விரும்பும் கிராமப்புற மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும் என்பது திண்ணம். 

1 Comments

Post a Comment
Previous Post Next Post