கனமழை காரணமாக 14.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(14.11.2022) திங்கள் கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
கனமழையால் பள்ளி,கல்லூரிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.