தமிழ்நாடு ஊரக மாணவர்கள் திறனறித் தேர்வு TRSTSE(TRUST)-Tamil Nadu Rural Students Talent Search Examination.
TRSTSE (TRUST)தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் :
--> 8 ஆம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் 50 சதவீதம் பெற்று தற்போது 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ / மாணவியர்கள் இத்தேர்வினை எழுதலாம்.
--> மாணவ/மாணவியர் குடியிருப்புப் பகுதியும், அவர்கள் பயிலும் பள்ளியும் ஊரகப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும்.
--> நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்தோவில் கலந்து கொள்ள இயலாது.
--> மாணவ/ மாணவியரின் பெற்றோர் வருமானம் ரூ.1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை:-
--> பொதுவாக ஜூன் - ஜூலை மாதத்தில் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவகும். www.dge.tn.nic.in என்ற இணையத் தள முகவரியில் வெளியிடப்படும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்புற்ற வேண்டும்.
--> தற்போது தேர்வுக் கட்டணம் ரூ 5 மற்றும் சேவைக்கட்டணம் ரூ. 10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினைப் பொறுத்தவரை விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டி இருப்பதால், மாணவ / மாணவியர் முன்னரே அச்சான்றிதழை பெற்று கைவசம்வைத்திருப்பது மிக அவசியம், மேலும் அரசால் அந்தந்த வருடத்தில் வெளியிடப்படும் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
தேர்விற்கான பாடத்திட்டம்:-
--> இத்தேர்வில் எட்டாம் வகுப்பில் மூன்று பருவங்களில் இருந்து அறிவியல், சமூக அறிவியல் பாடப்பகுதி, மனத்திறன் பகுதிகளில், வினாக்கள் கேட்கப்படும்.
மதிப்பெண் பங்கீடு:-
கணிதம் - 25மதிப்பெண்கள்
அறிவியல் -25மதிப்பெண்கள்
சமூக அறிவியல் -25மதிப்பெண்கள்
மனத் திறன் பகுதி -25மதிப்பெண்கள்
மொத்தம் -100 மதிப்பெண்கள்
மனத்திறன் பகுதி பங்கீடு (தோராயமாக) :
1. எண் தொடரில் விடுபட்ட
எண்ணை நிரப்புதல் : 5மதிப்பெண்
2. எண் / எழுத்து குறியீடல் : 5மதிப்பெண்
3) படம் மற்றும் எண் தொடர்பு: 5
4) தனித்த / வேறுபட்ட எழுத்து / : 5 வார்த்தைகள் கண்டறிதல்
5) தனித்த / வேறுபட்ட. : 5
படம் கண்டறிதல்
மொத்தம் = 25 மதிப்பெண்கள்
---> இத்தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான விடைக்கும் தமா 1 மதிப்பெண் அளிக்கப்படும்.
--> அனைந்து விளாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.
--> தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.
--> இத்தேர்விற்கு 150 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படும் விதம் :-
--> தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுள் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் 100 பேர் வீதம் (50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர்கள்) தேர்வு செய்யப்படுவர்.
மாணவ / மாணவியர்கள் பெறும் உதவித் தொகை :-
--> தேர்வு செய்யப்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழாங்கப்படும்.