தமிழகத்தில் 1-9 வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு வருமா?

 தமிழகத்தில் 1-9 வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு வருமா?_All Pass Upto 9th Standard Tamilnadu News

புதுச்சேரியை போல தமிழகத்திலும் ஒன்பதாம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிப்பு வருமா என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 





    கரொனா காரணமாக நடப்பாண்டு தாமதமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வை நடத்த கல்வித்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டும் ,மீண்டும் கரொனா அதிகரித்துவரும் சூழலை கருத்தில் கொண்டு ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    

    ஏற்கனவே எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று கட்டாய கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களையும் சேர்த்து தேர்ச்சி என்று அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




📌join our telegram: Click Here

📌join our whatsapp: click here

📌Subscribe our channel: click here











Post a Comment (0)
Previous Post Next Post