பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு....

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் விதிமுறைகள்

தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை மறுதினம் தொடங்கி, வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்பாடுகள் முழுமை அடைந்த நிலையில், அனைத்து அதிகாரிகளும் இறுதிகட்ட பணிகள் குறித்து ஆய்வு.

12-ஆம்‌ வகுப்பில், மாணவர்கள்- 3,98,321,
மாணாவிகள்-4, 38,996, மொத்தம்-8,37,317 பேர்
தேர்வு எழுதுகின்றனர்.



பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அனைத்து மாவட்டங்களுக்கும்
சென்றடைந்தன.

கேள்வித்தாள்கள்
முன்கூட்டியே கசிவதை தடுக்க, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் 19
இடங்களில் கேள்வித்தாள்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்கள்
வைக்கப்பட்டுள்ள மையங்களில் கேமிரா பொருத்தி கண்காணிக்கப்படுகின்றன.
Post a Comment (0)
Previous Post Next Post