தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்..

 தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு-தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்..

Flash News : LIVE: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.



கோடை  வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் தேர்வு நாட்களில் மட்டும் பள்ளிக்கு வருகை  வந்தால் போதும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வு தேதிகளில் மட்டும் பள்ளிக்கு வருகை தந்து தேர்வினை எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வழக்கம்போல தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி தேர்வுகள் நடைபெறும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.








Post a Comment (0)
Previous Post Next Post