10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கனமழை எதிரொலி - நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னையில், வரும் 25ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வுக்கு நவம்பர் 25-ல் நேர்காணல் நடைபெறுகிறது.
தேவையான தகுதிகள்:
கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை
பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
Post a Comment (0)
Previous Post Next Post