தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் -7 க்கு மாற்றம்.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆலோசனைப்படி வெயிலை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக்கூடிய காலம். எனவே தனியார் பள்ளிகள் பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக இந்த விடுமுறையை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.